சென்றவை எவை? வந்தவை எவை? இந்த கேள்விக்கு காலத்தை சொல்வதா? நிகழ்ச்சிகளா? சூழல்களா? மகிழ்ச்சியா, துன்பமா? இதே தரவுகள் தான் வந்தவை என்பவற்றிற்கும் அளவீடாக அமையும்.
காலம்: இதுதான் எல்லோரையும் தன்னுய பிடியில் வைத்து கொண்டே இருப்பது -
" நாம் அந்த காலத்தில் இது போன்று இல்லை என்ற சொல்லை கேட்டிருப்போம் கடந்தவை
எல்லாம் இனியவை என்போம் உண்மை நிதர்சனம் என்பது அவையும் கசந்த வையாக, அடக்க பட்ட உணர்வுகள், சாதி, மதம், பொருளாதாரம், பாலியல் பாகுபாடுகள் இவை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவத்திலும் தாக்கங்கள் பல்வேறுபட்ட தாக்கங்களை தரக்கூடியவனதாக இருந்தாலும் , அதன் பலன்கள் | சுவையூட்ட கூடிய நிகழ்வாக, காலத்தின் மறையாத வடுக்களையும் கூட தந்துவிட்டு போயிருக்கலாம், அதனால் வந்தவைகள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்ககூடிய அசாத்தியங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாததாக இருந்திருக்கலாம். உலகில் பலவித மனிதர்கள் நாடு மதம் தேசம், இனம், நிறம், செழுமை| வறுமை, வளமும் என பல்வேறு மனிதர்கள் நாம் காண கூடியதாக அமைந்திருக்கிறது.
இதிலும் முறன்பொருத்தப்பாடுகள்தான் அதிகம் நிறைந்துள்ளது.
இக்கரைக்கு அக்கரை பச்சை என தூரதரிசினிகள்தான் நம்மை ஆட்கொண்டு ஆளுமை செய்யும் அதை எப்படியும் பிடித்துவிட முயலும் உடல் பலமும் உணர்வு பலமும் ஒருங்கே ஒரு வண்டியில் பூட்டபட்ட இரட்டை மாடுகள் ஒருங்கே செல்லும் காலகட்டத்தில் வந்தவை என பார்க்கும்போது அங்கு உணர்வுகள், உணர்ச்சிகள் தான் முதன்மை கடப்பாளர்கள் .சென்றவை எனும்போது முதியோர் அனுபவ சொல்லின் வலிமை புரியாமல் தவிர்த்து சென்றது.
பறப்பதற்கு ஆசை கொண்டு இருப்பதை இழந்தது,
தத்துவத்துவம் இல்லா நெறியாட்கள் காலம் கடந்த நிலையில் திரும்பிபார்க்கும் போது நாம் தவறவிட்டவை, தவறாக தொட்டவை எல்லா தெரியவரும்போது நாம் தெளிந்த அறிவை அடைந்திருப்போமே தவிர அது குழந்தை தொட்டிலில் பாடும்பாட்டுபோல செவி மடுக்க வோ செயல்படுத்தவே முடியாத நீர் மேலெ ழுத்து போலவே போகும்.
மலரும் நினைவுகள் மட்டுமே மனதோடு இருக்கும்
வாழ்க்கை இணையர் என்பதுதான கவிதை
அந்த கவிதை நவரசங்களை கொண்டதா?அல்லது மெல்லிய இசையாய் மனதை வருடி அக சுகமளிக்கும் நல்விருந்தாக அமைவது என்பது அவர்களின் இயைந்து செயலாற்றும் தன்மையின் ஊடாக பறிமாறப்படும் ஒரு நுண்ணர்வு ஆகும்
அது துணையா? துன்பமா ?என்பதை பட்ட அனுபவங்களை கொண்டுதான் நாம் தீர்மானிக்கிறோம்.
இனிக்கும் நிகழ்வுடன் தொடங்கும் அனைத்தும் இனிமையாகவே முடியும் என்பதற்கு எந்த ஒரு அச்சாரமும் இல்லை. தொடக்கத்தில் மகிழ்ச்சி தராத இருந்தவைகளின் பின் விளைவு மிக அற்புதமான முடிவை தந்தவைகளையும் காண்கிறோம்.
திட்டமிடாத செயல்கள், கட்டுப்பாட்டில் இல்லாத செயலாக்க (மனம் போன போக்கு) செயல்களான ஏற்படும் இவற்றின் விளைவுகள் தான் அவற்றில் பெற்ற அனுபவ எச்சங்கள் தான் வந்தவை, சென்றவையாக மாறி நிற்க்கும்
பிள்ளைகள்
இவர்கள் தான் நம் நம்பிக்கை ஊன்று கோல்கள் ஆகும்.
ஆண்கள் :- காலம் காலமாக நம்மனதில் ஆழமாக பதியபட்ட ஒரு கருத்து நம் குடும்பத்திற்கு ஆண் குழந்தை தான் நம்மைக் காக்கும், பெண் பிள்ளைகள் தமக்கான வாரிசு இல்லை வேறு ஒரு குடும்பத்திற்கு நாற்றாகத்தான் சென்று விளைவை தரும் அதனால்நமக்குஎன்ன பயன் என்று நினைத்த காலம் ஒன்று காரணம் அன்று சார்துவாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை காலம் மாறியதுஅவர்களும் சரிசமமாக வாழ வேண்டும் அவர்களும் நாகரீகமடைந்த ஒரு சமூகத்தின் அங்கம் என்ற சிந்தனை 18ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி சமுதாய சமத்துவம் என்ற நிலைக்குவந்துள்ளோம்
இப்போது எந்த பிள்ளையும் ஒன்று தான் என்ற மனநிலை வந்துள்ளது குறிப்பாக ஆண் சாந்த உலகத்தில் பெண் சார்ந்த உறவுகள் மட்டும்தான் தன் தாய் தந்தை உறவை சார்ந்து நிற்கின்ற

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக